×

ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, விநாடிக்கு 1,800 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 8 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்தது.

நேற்று காலை 10 மணி நிலவரப்படி, தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினி அருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Tags : Hoganakkal, water flow, increase
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...