சென்னை: வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பு தமிழகத்தில் அதிகமாகியுள்ளது. அனைத்து அரசு வேலைகளிலும் தமிழர் உரிமை பறி போயுள்ளது என விசக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய திருமாவளவன், இந்தி திணிப்பை எதிர்த்து போராடியதன் காரணமாக தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கிறது என்றும் கூறினார்.