சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் பேட்டியளித்த உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் உறுதியளித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017,18ஆம் ஆண்டு நடந்த தேர்வுகளில் முறைகேடு புகார் எழுந்தது. முறைகேடு புகாரை அடுத்து பேராசிரியர்கள் உட்பட 37 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.