×

அசாம் மாநிலத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் காணாமல் போனதாக தகவல்

ஜோர்கட்: அசாம் மாநிலம் ஜோர்கட் நகரில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் மாயமானதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசாமிலிருந்து அருணாச்சல பிரதேசத்துக்கு சென்ற AN-32  வகையை சேர்ந்த விமானப்படை சரக்கு விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்ற ஏ.என் .32 ரக விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30, சி-130 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. மதியம் 1 மணியில் இருந்து ஏ.என்.32 ராக விமானத்தின் ராடார் சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : passengers ,Indian Air Force ,Assam , Indian Air Force, aircraft, magic
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...