சென்னை : தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் கேட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் புதுவண்ணாரப்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் களைந்து சென்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் விநியோகிக்க கோரி மணப்பாறை கோவில்பட்டி சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து சென்ற மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.