திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே முன்னிலைக் கோட்டம் அரசு தொடக்கப்பள்ளியில் பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவிகளிடம் தவறாக நடப்பதாக தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் மற்றும் மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.