புதுடெல்லி: தெலங்கானா மாநிலம் உதயமான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பல ஆண்டுகளாக தனி மாநிலம் கோரி போராட்டம் நடந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி ஆந்திராவில் இருந்து ஒரு பகுதி பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் 5ம் ஆண்டு தினம் ேநற்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் மூலம் நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தெலங்கானா மக்கள் கடின உழைப்பிற்கு பெயர் பெற்றவர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள். தெலங்கானா மாநில முன்னேற்றத்திற்கு நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். அதேபோல், ஆந்திர பிரதேச மக்களுக்கும் வாழ்த்துக்கள், நாட்டில் விளையாட்டு முதல் அறிவியல் வரை, கல்வி முதல் பொழுதுபோக்கு வரை அனைத்து துறைகளிலும் ஆந்திராவின் பங்களிப்பு மகத்தானது. வரவிருக்கும் ஆண்டுகளில் மாநிலம் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்,’ என குறிப்பிட் டுள்ளார்.