களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பத்மநேரி பீட் வெள்ளிமலை வனப்பகுதியில் மின்னல் தாக்கியதால் கடந்த 30ம் தேதி மாலை திடீர் என காட்டுத் தீ ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக எரிந்த காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர களக்காடு, திருக்குறுங்குடி, அம்பை சரகங்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், கிராம மக்கள் உள்பட 100 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 10க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து நாலாபுறமும் சென்று முழூ வீச்சில் தீ அணைப்பு பணியை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவில் காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டது.