×

சதுரகிரியில் இனி அன்னதான கூடங்கள் திறப்பு இல்லை

திருவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் கடைகளில் இனி உணவுப் பொருட்கள் விற்க அனுமதியில்லை. பூஜை பொருட்கள் மட்டுமே விற்கப்படும்.  கோயில் பெயரை சொல்லி, முறைகேடாக லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததால், அன்னதானக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.  இனி  அன்னதானக்கூடங்களை திறக்க வாய்ப்பு இல்லை. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்படும். பக்தர்கள் மலையேற மாதத்தில் 8  நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : Sadakarirai ,opening ,hall , Sadakarirai , longer ,opening , hall
× RELATED கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்...