×

போர் விமானங்கள் குண்டுவீச்சு இஸ்ரேல் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி

பெய்ரூட்: இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டதாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது. சிரியா - இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பதுங்கி உள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகள் மீது இஸ்ரேல் விமானப்படையும் தாக்குதல் நடத்தும். இந்நிலையில், இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் சிரியாவில் இருந்து நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதைத்ெதாடர்ந்து ஒரு சில மணி நேரங்களில் சிரியா மீது இஸ்ரேல்  போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சிரியாவில் உள்ள பல்வேறு ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. பீரங்கி படை பிரிவு, பல்வேறு கண்காணிப்பு மற்றும் உளவு பிரிவு நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது,’ என்று கூறியுள்ளார். இதனிடையே, இஸ்ரேல் தாக்குதலில் 3 சிரியா வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டதாக சிரியா தெரிவித்துள்ளது.

Tags : raid ,Israeli , War planes, bombing, Israel attack, Syria, kills
× RELATED ரெய்டு நடத்தி ‘பே பிஎம்’ வசூல்...