×

போரூர்-குன்றத்தூர் பிரதான சாலை விரிவாக்க பணிகள் திடீர் முடக்கம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பல்லாவரம்: சென்னையில் இருந்து பெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு உள்பட பல பகுதிகளுக்கு எளிதில்  செல்வதற்கு வசதியாக போரூர்-குன்றத்தூர் பிரதான சாலை உள்ளது. இப்பகுதியில் ஏராளமான வீடுகள் கட்டப்படுவதால் அதிகமாக மக்கள் குடியேறி வருகின்றனர். இதன் காரணமாகவும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்தாண்டு போரூர், குன்றத்தூர் சாலை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக போரூர் முதல் குன்றத்தூர் வரை சாலையின் இரண்டு பக்கமும் பள்ளம் தோண்டப்பட்டு ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட நிலையிலேயே விரிவாக்கப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக உள்ளது.

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘’போரூர்-குன்றத்தூர் பிரதான சாலையில் குன்றத்தூர் ஆர்டிஓ அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், கோவூர் ஊராட்சி அலுவலகம், மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் அலுவலக வேலை காரணமாக வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும்போது சாலையின் இரு புறமும் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையில் பிரபலமான பள்ளிகள் இருப்பதால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்கள், குழந்தைகளுடன் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள போரூர்-குன்றத்தூர் பிரதான விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.     



Tags : Porur-Kundirathur ,motorists , Porur-Kundanthur, main road, works, motorists
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...