கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தலை தொடர்ந்து நடந்த வன்முறையில் பாஜகவை சேர்ந்த அஜய் மண்டல் என்பவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார். 24 பர்கானா மாவட்டத்தில் பாஜித்பூர் கிராமத்தில் நடந்த அரசியல் மோதலில் அஜய் மண்டல் கொலை செய்யப்பட்டார். மேலும் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூரின் அமன்ராய் என்ற திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்துள்ளார்.