×

ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழப்பு

தும்கா: ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்துள்ளனர்.  ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில், மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  4 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 மாவோயிஸ்டுகள் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. சண்டையில் குண்டு காயமடைந்த 5 மாவோயிஸ்டுகளை தேடுவதாக பாதுகாப்புப் படையினர் தகவல் தெரிவிக்கின்றன.


Tags : Maoists ,Tumkur ,Jharkhand , Jharkhand, Maoists, Security Force
× RELATED வயநாடு தொகுதி மக்களை...