×

யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோர் வசதிக்காக மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோர் வசதிக்காக இன்று அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய முக்கிய நகரங்களில் யுபிஎஸ்சி தேர்வு இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்நிலையில், சென்னையில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரத்தை மாற்றி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக காலை 8 மணிக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுத செல்பவர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில்கள் இன்று அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரையில் இயக்கப்படும். மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Train Time Transfer , UPSC exam, facility, metro train, time, transition
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...