×

சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: அம்பத்தூர் ஆசிரியர் காலனியை சேர்ந்த சுபா (14), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி, கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாவை தேடி வந்தனர்.
விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா, பெரியமணி ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (23) என்பவருக்கும், சுபாவுக்கும் பேருந்து பயணத்தின் போது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதும், சுரேஷ் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுபாவை கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும், கோயிலில் வைத்து சுபாவுக்கு தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. அவர்களை மீட்ட போலீசார், சுபாவை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : Rape, rape, sex, rape, arrest
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு