×

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கணவன் எரித்து கொலை போலீசில் மனைவி சரண்

சென்னை: மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி ஆனைக்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (55). விவசாயி. இவரது மனைவி மலர் (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கன்னியப்பனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர், தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கன்னியப்பன் வேலை முடிந்து வீடு திரும்பும்போது போதையில் இருந்தார். இதனால், மீண்டும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மலர், வீட்டின் சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து, கணவன் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் உடல் முழுவதும் தீ பரவி படுகாயமடைந்த கன்னியப்பன், அலறி துடித்தபடி, வெளியே ஓடிவந்து, அங்குள்ள காய்ந்த புல்தரையில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கன்னியப்பன் பரிதாபமாக இறந்தார்.புகாரின்படி ஒரத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் மலர், போலீசில் நேற்று அதிகாலையில் சரணடைந்தார். போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags : murder ,Charan , Drunkenness, dispute, rage, murder, saran
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...