×

சிகெரெட் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக தகவல்

டெல்லி: சிகெரெட் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு திட்டத்தின் ஆலோசகர் நரேஷ் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புற்றுநோய்சார்ந்த இறப்புகளில் 40 சதவீதம் புகையிலை பழக்கத்தால் உண்டாவதாக கூறியுள்ளார். சிகெரெட் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக அவர் கூறியுள்ளார்.

அடுத்தவர்கள் வெளியிடும் பீடி, சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், தொடர் இருமல், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, நுரையீரல் அழற்ச்சி நோய் போன்றவை படிப்படியாக ஏற்பட்டு இறுதியில் அது நுரையீரல் புற்றுநோயாக மாறி மரணத்தில் முடிவதாக நரேஷ் புரோஹித் தெரிவித்துள்ளார்.

Tags : deaths ,India , Delhi, Cigarette,sufferers,suffering ,tobacco smoke
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...