×

பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கு ஜூன் 3ல் அசல் மதிப்பெண் சான்று

சென்னை: மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிளஸ் 1,  பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றுகள்(மறுகூட்டல், மறு மதிப்பீடு உள்பட)அந்தந்த பள்ளி தலைமை  ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும். தனித்  தேர்வர்களுக்கான அசல் சான்றுகள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் 3 ம் தேதி முதல் வழங்கப்படும்.  பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் 600 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் மதிப்பெண் பட்டியல்கள் தனித் தனியே வழங்கப்படும். பிளஸ் 1,  பிளஸ் 2 வகுப்புகளிலும்  முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு அவர்கள் இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண்பட்டியலாக வழங்கப்படும். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பிறகே அவர்களுக்கு  தனித்தனி மதிப்பெண்கள் வழங்கப்படும்.



Tags : score test ,test writers , Plus 2 exam, score proof
× RELATED போட்டி தேர்வு எழுதுபவர்கள் புகார்...