×

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-செங்கல்பட்டு மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 11.02 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் 3, 4, 6, 7, 8 ஆகிய தேதிகளில் தாம்பரம்  - செங்கல்பட்டு வரை ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரை - தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேப்போல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் 3, 4, 6, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு - தாம்பரம் வரை ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் - சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பிற்பகல் 11 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை மற்றும் 9ம் தேதி தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டு சென்னை கடற்கரை - தாம்பரம் வரையும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பிற்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை மற்றும் 9ம் தேதி சென்னை கடற்கரை- தாம்பரம் வரையும் இயக்கப்படுகிறது.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை மற்றும் 5, 9 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டு தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படுகிறது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை மற்றும் 3, 4, 9 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டு தாம்பரம்- சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பிற்பகல் 11.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் 3, 4 ஆகிய தேதிகளில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டு சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும்.

Tags : Chengalpattu , Tamparam-Chengalpattu , trains canceled,maintenance work
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்