சென்னை: சென்னை அரசு ரப்பர் கார்பரேஷன் லிமிடெட்டில் பணிபுரிந்து வந்த ஐஎப்எஸ் அதிகாரி துரைராசு, வனச்சரக முதன்மை தலைமை காப்பாளர் மற்றும் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். தற்போது அவர் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு சென்னையில் உள்ள தலைமை வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வன அதிகாரி, வனக்காப்பாளர், முதன்மை வனக்காப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் இவர் 34 ஆண்டுகளாக பணியாற்றியவர்.