சென்னை: பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலினை அழைக்காதது பாஜகவின் பிரிவு மனப்பான்மையை காட்டுகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மதத்தை முன்வைத்து பாஜக பிரசாரம் செய்ததால்தான் காங்கிரஸின் தேர்தல் வியூகம் எடுபடவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.