×

பொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக நள்ளிரவில் 30 பேர் அதிரடியாக கைது

புதுக்கோட்டை: பொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக நள்ளிரவில் 30 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ வைரலானது. ஒரு சமூகத்தினர் மற்றும் பெண்களை பற்றி வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்கினர்.

இதில் 7 வாகனங்கள், 2 பஸ்கள் உடைக்கப்பட்டன. மேலும், 3 போலீஸ்காரர்கள், அந்த சமூகத்தை சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது பொன்னமராவதி போலீஸ் வழக்குப்பதிந்தது. இந்நிலையில் பொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக நள்ளிரவில் 30 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Ponnaravarathi , Ponnamaravathi,Riots, violence, arrest
× RELATED பொன்னமராவதி ஒன்றிய அலுவலக வளாகத்தில்...