சென்னை: மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவாரா என்ற கேள்விக்கு தமிழிசை இவ்வாறு பதிலளித்துள்ளார். தமிழக மக்கள் மீது பாஜகவுக்கு அக்கறையில்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.