×

போலீஸ் ஏட்டு கன்னத்தில் ‘பளார்’ ஆசாமி கைது

ஆலந்தூர்: கிண்டி மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்தவர் நூர்முகமது (40). இரும்பு வியாபாரி. இவர், நேற்று மது அருந்திவிட்டு, தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், கிண்டி காவல் நிலைய ஏட்டு சசிகுமார் (35), நூர்முகமது வீட்டுக்கு வந்து, அவரிடம் விசாரித்தபோது, ‘‘நீ என்ன பெரிய இவனா?’’ என கேட்டு, அவரது சட்டையை பிடித்து இழுத்து, கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதில், சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், நூர்முகமதுவை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Pallar' Asami , Police check, cheek 'pawar,' Asami, arrested
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...