×

ஆபாச நடனம் எதிரொலி பொள்ளாச்சி லாட்ஜ்களில் போலீசார் சோதனை

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடையில் அனுமதியின்றி செயல்பட்ட ஒரு தனியார் ரிசார்ட்டில், பெண்களை ஆபாசமாக நடனமாட வைத்து மதுவிருந்து நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆனைமலை, அதனை சுற்றியுள்ள  தனியார் ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் நள்ளிரவு ஆனைமலையில் உள்ள லாட்ஜ்களில் வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். விடுதியில் தங்குபவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா எனக்கேட்டு தங்குபவர்கள் குறித்த முகவரியை தினமும் போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Tags : Pollachi , Pollachi lights , pornography
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!