பெங்களூரு: ‘‘ராகுல் காந்தியால் தான் கர்நாடகாவில் மஜத.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. எனது தோல்விக்கு இதுவே முக்கிய காரணம்,’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் போட்டியிட்ட சிக்கபள்ளாபூர் மக்களவை தொகுதி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைய நேரிட்டது. ஆட்சி செய்வதில் வேண்டும் என்றால் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தது மிகமிக தவறு. ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக போட்டியிட்டிருந்தால் மும்முனை போட்டி ஏற்பட்டு காங்கிரஸ் தனித்து 12 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும். கர்நாடகாவில் மஜத காங்க்ிரஸ் இடையே கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்திதான் காரணமாக இருந்தார். இதுதான் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு ஆளாக காரணமாக அமைந்து போனது.