×

சோழவந்தான் தொகுதியில் அதிமுகவினர் வழங்கிய டோக்கனை கிழித்தெறிந்த மக்கள்

வாடிப்பட்டி: சோழவந்தான் தொகுதியில் அதிமுகவினர் வழங்கிய டோக்கனை மக்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் மாணிக்கம் போட்டியிடுகிறார். தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாகவும், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினராகவும் உள்ள இவர் பிரசாரம் துவங்கிய நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கட்சிக்குள் இவர் மீது இருந்த அதிருப்தி காரணமாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை முழுமையாக செய்ய முடியவில்லை. இதற்குப் பதிலாக வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கும் அதிமுக நிர்வாகிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர் உதயகுமார் மூலம் நிர்வாகிகளை சரிக்கட்டி, டோக்கன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க திட்டமிடப்பட்டது. இதனையடுத்து கட்சி சின்னம் அச்சடிக்கப்பட்ட டோக்கன்களை வாக்காளர்களுக்கு வழங்கியதாக தெரிகிறது. இருப்பினும் நம்பிக்கையில்லாததால் டோக்கன்களை வாங்க பெரும்பாலான வாக்காளர்கள் மறுத்தனர். இருப்பினும் வாக்காளர்களிடம் வலுக்கட்டாயமாக டோக்கன்களை கொடுத்து விட்டு அதிமுகவினர் சென்றனர். அவர்கள் வழங்கிய டோக்கன்களை வாக்காளர்கள், தெருக்களில் கிழித்து எறிந்தனர்.  இதுபோன்று வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் வழங்கிய டோக்கன்கள் கிழிந்த நிலையில் ரோட்டில் கிடந்தன. இது அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக டோக்கன் கண்டித்து மார்க்சிஸ்ட் மறியல்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொன்னுத்தாய், அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிடுகின்றனர். தொகுதிக்கு உட்பட்ட மேல அனுப்பானடி பகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் மதியம் 3 மணியளவில் அதிமுகவினர் சிலர், இரட்டை இலை சின்னம் பொறித்த டோக்கன்களை கொடுத்து ஓட்டு போட்டு விட்டு, டோக்கனை கொடுத்து ₹500 பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர். அப்பகுதியில் வேன் ஒன்றில் வைத்து பணம் பட்டுவாடா செய்ததாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியினர் சிலரும் வாக்காளர்கள் போல் அந்த டோக்கன்களை வாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேஸ்வரியிடம் புகார் தெரிவித்தனர். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து வேட்பாளர் பொன்னுத்தாய் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியபின் கலைந்து சென்றனர். …

The post சோழவந்தான் தொகுதியில் அதிமுகவினர் வழங்கிய டோக்கனை கிழித்தெறிந்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Cholavandan ,Vadipatti ,Cholavanthan ,Madurai District ,Constituency ,Dinakaran ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை