×

ஐசிஎப் ரயில்வே குடியிருப்பில் பைக் திருட்டு; 2 சிறுவர்கள் கைது

அண்ணாநகர்: அயனாவரம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் பேர் நேற்று முன்தினம் இரவு ஐசிஎப் ரயில்வே குடியிருப்பில் புகுந்து ஒரு வீட்டில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். ஐசிஎப் வழியாக வந்தபோது ரோந்து வாகனத்தில் வந்த ஐசிஎப் போலீசார் 2 சிறுவர்களை மடக்கி பிடித்து ஐசிஎப் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது, ஐசிஎப் ரயில்வே குடியிருப்பில் பைக்கை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இரண்டு சிறுவர்களிடம் வேறு எந்த எந்த இடத்தில் கைவரிசை காட்டி உள்ளனர்? என ஐசிஎப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஐசிஎப் ரயில்வே காவலர் லாசர் என்பவர் ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : children ,ICF , ICF Railway, children arrested
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்