×

“நான் எழுதியது நன்றி கடிதம் மட்டுமே” கவர்னர் கிரண்பேடி அதிரடி

புதுச்சேரி:  புதுவை கவர்னர் கிரண்பேடி நேற்று, தான் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதை குறிப்பிட்டு மக்களுக்கு உருக்கமான கடிதத்தை  எழுதியிருந்தார். அதில், என் பணியின் நினைவுகளை விட்டுச் செல்லும் காலம் வந்துவிட்டது. புதுச்சேரியின் தேவைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், புதுச்சேரியில் இருந்து விடைபெறுகிறாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்தநிலையில், கிரண்பேடி நேற்று முன்தினம் டெல்லி சென்றார். இருப்பினும் அவர் டெல்லி செல்வதற்கு முன்பு, பணியாளர்களிடம் தனது பொருட்களை எடுத்து வைக்குமாறு உத்தரவிட்டு சென்றதாக தகவலும் பரவியது. இதனால் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் அல்லது வேறு மாநிலத்துக்கு கவர்னராக மாற்றப்படலாம் என்று செய்திகள் வெளியானது.

இதை கிரண்பேடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி வாட்ஸ்-அப்பில் நேற்று பதில் அளிக்கையில், மக்களுக்கு நான் எழுதியது நன்றி தெரிவிக்கும் கடிதம் மட்டுமே’ என தெரிவித்துள்ளார். மேலும் வதந்திகள் பரப்புவோர் எனது கடிதத்தை நன்றாக படிக்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் கவர்னர் பதவியில் நீடிப்பார் என்றே தெரிகிறது.

Tags : Governor ,Scramble Action , 'Thank you letter I wrote only' Governor's Scandal, Action
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...