சென்னை : ராகுல் காந்தியே இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று காங்கிரஸ் கட்சி சொல்லத் தவறி விட்டது என்று சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியின் போது கே.வி. தங்கபாலு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் ராகுல் தான் அடுத்த பிரதமர் என்று காங்கிரஸ் கட்சி சொல்லத் தவறியதால் தான் தோல்வி ஏற்பட்டது. ஆனால் தமிழகம்,கேரளாவில் ராகுலே பிரதமர் என்று சொன்னதால் தான் வெற்றி கிடைத்தது என்று கே.வி. தங்கபாலு தெரிவித்தார்.