மதுரை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜா கோபுர நுழைவாயில் வழியாக பக்தர்களை அனுமதிக்கக் கோரி வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த நாராயணன் எனபவர் தாக்கல் செய்த மனுவில் ராஜகோபுரம் எப்போது அடைக்கப்பட்டு உள்ளதாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கோவில் இணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.