×

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை : ஜாமீன் மனு தள்ளுபடி

நாமக்கல் : ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் இடைத்தரகர் லீலா, உதவி செவிலியர் சாந்தி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சட்ட விரோதமாகக் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இடைத்தரகர் லீலா நாமக்கல் நீதிமன்றம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரது ஜாமீன் 4-வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது. 


Tags : Rasipuram Children's , Rasipuram Children's Sale,Bail dismissed
× RELATED ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு...