×

புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலையில் 6 பேர் கைது

பெரம்பூர்: புதுவண்ணாரப்பேட்டை அம்மணியம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (24). ரவுடியான இவர், கஞ்சா போதைக்கு அடிமையானவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். தினேஷ் மீது வழிப்பறி, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு அம்மணியம்மன் தோட்டம் பகுதியில் தினேஷ் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 6 பேர், அவரை வழிமறித்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொன்றனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், தினேசுக்கும் அதே பகுதியை சேர்ந்த மாங்கா சதீஷ் (26) என்பவருக்கும் மோதல் இருந்துள்ளது. யார் பெரிய ரவுடி என்ற தகராறில் தினேஷை மாங்கா சுரேஷ் கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் காசிமேடு கடற்கரை பகுதியில் பதுங்கி இருந்த மாங்கா சதீஷ் (26), பிரவீன் (20),  மகேஷ்குமார் (19), அரி (19), சந்தோஷ் (19), செல்வா (எ) தமிழ்செல்வன் (23)  ஆகிய 6 பேரை நேற்று போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.


Tags : Rudy , Puthananarappettai, Rowdy murder, 6 people arrested
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை