×

பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது : பல பெண்களை ஏமாற்றியது விசாரணையில் அம்பலம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே மாந்திரீகம் செய்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். போலி சாமியாரின் பாலியல் லீலைகளுக்கு உடந்தையாக இருந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள ஓம்பூரில் வசித்து வரும் மணி என்கிற செல்வமணி என்பவர் மாந்திரீகம் செய்வதாக கூறி பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வடமலை பாக்கம் கிராமத்திற்கு சென்ற சாமியார், அங்கிருந்த இளம்பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் உடன்படாததால், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இதன் பேரில் திண்டிவனம் போலீசார் மணியை கைது செய்துள்ளனர். அவரது பாலியல் விளையாட்டுகளுக்கு உடந்தையாக இருந்த ஹேமா எனபவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : rape ,Sameer ,investigation ,women , Rape , fake Sameer ,arrested
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...