சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூரில் குடும்ப தகராறில் மகனை குத்திக்கொன்ற தந்தை பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வந்து மருமகளிடம் தகராறு செய்த மகன் நாகராஜை தடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மகனை கொன்ற தந்தை பாண்டியனை கைது செய்த குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.