×

பிரேசில் சிறையில் மோதலில் 15 கைதிகள் பலி

மனாவுஸ் : பிரேசில் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள அமேசான் நகரின் மனாவுஸ் பகுதியில் உள்ள ஒரு சிறையில், இரு குழுக்களுக்கிடையே நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். உலகிலேயே அதிக கைதிகளைக் கொண்டதாக இந்த சிறை திகழ்கிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கணக்கெடுப்பின் படி 7,26, 712 கைதிகள் இருந்தனர்.

மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கைதிகள் பல பிரிவுகளாக மாற்றி அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அங்கு கைதிகளுக்கிடையே நேற்று முன்தினம் திடீர் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் சிறைக்காவலர்கள் அந்த மோதலை உடனடியாக கட்டுப்படுத்தினர். இருப்பினும் 15 கைதிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மோதல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : prisoners ,jail ,Brazil , 42 prisoners, strangled,Brazil ,jail clashes
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்