×

ஜார்க்கண்ட் மாநிலம் சாரய்கெல்லா என்ற இடத்தில் குண்டுவெடிப்பு: துணை ராணுவத்தினர் 11 பேர் காயம்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் சாரய்கெல்லா என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் துணை ராணுவத்தினர் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் சராய்கெல்லா பகுதி அருகே குச்சாய் என்ற இடம் உள்ளது. இதில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு படையினர் அங்கு முகாம் இட்டு இருந்தனர். அப்போது ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலாவில் உள்ள குசாய் பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் இணைந்து மாநில போலீசாரும் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிறப்பு படைப்பிரிவு முகாமில் சிறியரக குண்டு வெடித்தது.

அப்போது அங்கு வந்த நக்சல்கள் திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டு வெடிப்பு நடைபெற்றதும், மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்பில்  11 வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Deputy ,Jharkhand ,Saraykella ,personnel ,Army , Jharkhand, Saraykella, blast
× RELATED மது கடைகளை மூட உத்தரவு