×

மகன்களுடன் சுற்றுலா சென்றபோது அலையில் சிக்கி தொழிலாளி பலி: திருவொற்றியூரில் பரிதாபம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராமநாதபுரம்  4வது தெருவை சேர்ந்தவர் நடராஜ் (35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரம்யா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால், இவரது மகன்கள் சுற்றுலா  செல்ல விரும்பினர். இதையடுத்து, நடராஜ், தனது மகன்களுடன் ராமகிருஷ்ணன் நகர் கடற்கரைக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர், மகன்களை கரையில்  உட்கார வைத்துவிட்டு, நடராஜ் மட்டும் கடலில் குளித்தார். அப்போது, திடீரென எழுந்த  ராட்சத அலை நடராஜை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்து அவரது மகன்கள் அலறி கூச்சலிட்டனர். பின்னர், செல்போன் மூலம் தங்களது  அம்மாவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ரம்யா மற்றும் உறவினர்கள் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அதற்குள் நட்ராஜ் சடலமாக கரை  ஒதுங்கினார். எண்ணூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

* தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூரை சேர்ந்த சுரேஷ் (38), நேற்று காலை பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்தபோது, சரக்கு ரயில் மோதி இறந்தார்.
* தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் பாசில் தெருவை சேர்ந்த துர்காதேவி (64), நேற்று முன்தினம் மாலை கவுரிவாக்கம் பகுதியில் வேளச்சேரி பிரதான சாலையை கடந்தபோது, வேகமாக வந்த பைக் மோதி இறந்தார். போலீசார் வழக்கு பதிவு  செய்து விபத்து ஏற்படுத்திய மேடவாக்கம் கூட்ரோடு, விஜயநகரை சேர்ந்த கார்த்திக் (19) என்பவரை கைது செய்தனர்.



Tags : sons ,Thiruvottiyur , Traveling , sons, Wrecked laborers, Thiruvottiyur
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி