×

கல்லுக்குட்டையில் மூழ்கி சிறுமி சாவு நீச்சல் கற்றுக்கொடுத்தவர் கைது

வேளச்சேரி: செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சிவா என்பவரின் மகள் ஆனந்தி (14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 24ம் தேதி தோழிகளுடன் ஒட்டியம் பாக்கத்திலுள்ள  கல்லுக்குட்டையில் குளித்துக் கொண்டிருந்த ஆனந்தி, திடீரென நீரில் மூழ்கி மாயமானாள். தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் தேடியும் ஆனந்தியை மீட்க முடியவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஆனந்தியின் உடல் கல்லுக்குட்டையில் மிதந்தது. பள்ளிக்கரணை போலீசார், சிறுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும்,  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் அருண் (28) என்பவர் ஆனந்தி உட்பட 5 சிறுமிகளுக்கு கல்லுக்குட்டையில் நீச்சல் கற்று கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக  ஆழமான பகுதிக்கு ஆனந்தி சென்றதால் நீரில் மூழ்கி பலியானது  தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : swimmer , Drowning ,stone ,killing , little girl, Swimmer, arrested
× RELATED ஒலிம்பிக்சில் பங்கேற்ற வாள்வீச்சு...