திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் திருப்பதி வந்தார். திருமலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் நேற்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் மகா துவாரம் அருகே தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுதாகர்யாதவ் தலைமையில் அர்ச்சகர்கள் இஸ்திக்கப்பாள் மரியாதையுடன் சந்திரசேகர ராவை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர். மேலும் ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைக்கப்பட்டு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.