×

டெல்லியில் தலைவர்களை சந்தித்த பின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார் வசந்தகுமார்

சென்னை:  கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வசந்தகுமார் வெற்றி பெற்றார். இவர், ஏற்கனவே நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். எம்பியாக தேர்வு செய்யப்பட்டதால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் நாங்குநேரி தொகுதி காலியாக அறிவிக்கப்பட உள்ளது. அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், வசந்தகுமார், டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களை சந்தித்து முறைப்படி அவர்களுடன் விவாதித்து அதன் பின்னரே ராஜினாமா கடிதத்தை வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து நேற்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக்கை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி அதன் பின்னரே ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. இதனால் இன்று அல்லது நாளை  வசந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்துடன் சபாநாயகரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Vasanthakumar ,MLA ,leaders ,Delhi , Delhi, MLA post, resignation, Vasanthakumar
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...