துபாய் : துபாயில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மத நல்லிணக்க நிகழ்ச்சி 225 ஆம் தேதி சனிக்கிழமை லேண்ட்மார்க் பிரிமியர் ஹோட்டலில் அதன் நிர்வாகி முஹம்மது நஜீம் முன்னிலையில் நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எழில் கரோலின் மற்றும் அமீரக காயிதே மில்லத் பொது செயலாளர் ஹமீது ரஹ்மான்,அமீரக காங்கிரஸ் பொருளாளர் கீழை ஜமீல், மஜக ரஹ்மத்துல்லா,ரசாக்,விசிக சரவணன்,திருமுருகன், ஆயப்பாடி முஜீப், இதர கட்சி பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கட்சி நிர்வாகிகள் சாதிக் முஸ்தபா, லோட்டஸ் சேகர், ஜெயராமன் முஹைதீன், பஷீர், ஹாஜா அலாவுதீன், ஜாபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து அமமுகவின் கழக செய்தி தொடர்பாளர் புகழேந்தி அலைபேசிமூலம் சிறப்புரையாற்றினார்.