புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், அகமது படேல் ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.