×

நாட்டின் மதிப்பை பாதுகாக்க எதையும் இழக்க தயார்: சோனியா அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘நாட்டின் மதிப்பை பாதுகாப்பதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக உள்ளேன்’’ என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி  பெற்றுள்ளார். இந்நிலையில், ரேபரேலி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:நாட்டின் அடிப்படை மதிப்புகளை பாதுகாப்பதற்காக எல்லாவற்றையும் இழக்க தயாராக உள்ளேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

காங்கிரஸ் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடிப்பேன். எனக்கு எது  நேர்ந்தாலும், தியாகத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். வரும் நாட்கள் மிக கடினமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால், உங்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கை என்ற சக்தியில் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். எல்லா சவால்களையும் எதிர்க்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. எல்லா மக்களவை தேர்தலை போலவே என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்தீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும், என்  வெற்றிக்காக பாடுபட்ட சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சுவாபிமான் தளம் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.



Tags : country ,announcement ,Sonia , lose , protect,country's ,worth
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...