×

ஒடிசாவில் தொடர்ந்து 5வது முறையாக பட்நாயக் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர்

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆட்சி அமைக்க நவீன் பட்நாயக்குக்கு, ஆளுநர் கணேஷி லால் அழைப்பு விடுத்துள்ளார். ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. மொத்தமுள்ள 147 பேரவை தொகுதிகளில் 146க்கு மட்டும் தேர்தல் நடந்தது. இதில், 112 இடங்களை ஆளும் பிஜூ ஜனதா தளம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக்கை சட்டப்பேரவை கட்சி தலைவராகவும், முதல்வராகவும் பிஜு ஜனதா தள எம்எல்ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர். பின்னர் ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க நவீன் பட்நாயக் உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். வரும் 29ம் தேதி பட்நாயக் 5வது முறையாக மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கிறார்.

Tags : Governor ,Odisha ,Patnaik , Orissa, Patnaik, governor, governor
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...