×

மேலூர் நகராட்சியில் குடியிருப்புக்கு நடுவில் சுடுகாடு

மேலூர்: மேலூர் நகராட்சியில் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் உள்ள சொக்கம்பட்டியில் சுடுகாடு ஒன்று உள்ளது. சொக்கம்பட்டியில் இருந்து அழகர்கோவில் சாலைக்கு செல்லும் வழியில் உள்ள இந்த சுடுகாட்டின் பயன்பாடு சில வருடங்களுக்கு முன்பு வரை  அதிகமாக இருந்தது. மேலூரில் பட்டாளம் சுடுகாடு மின்சார மயனமாக மாறிய பிறகு பெரும்பாலானவர்களின் பயன்பாடு அங்கு மாறியது.
தற்போது இந்த சுடுகாட்டினை சுற்றி புதிதாக பல்வேறு குடியிருப்புகள் உருவாகி விட்டது. இச்சாலையை நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் பள்ளி மாணவர்கள் இச்சாலையை கடக்கும்  போதும் சுடுகாட்டில் எரியூட்டி தகனம் நடைபெறுவதும் உண்டு. பலரும் அச்சத்துடன் இவ்விடத்தை கடந்தாலும், இப்பகுதியை சேர்ந்த சிலர் இந்த இடத்தை தங்கள் கால்நடைகளை கட்ட பயன்படுத்துவதும் உண்டு. எனவே இந்த சுடுகாட்டை  வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : residence ,Maloor , Melur municipality, residence, resort
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...