கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏஷியா விமானத்தை தொழில் பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்தனர். மர்மநபர்கள் விமானத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து பெங்களூருவில் இருந்து கொல்கத்தா வந்து சேர்ந்த போது விமானத்தை சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் சுற்றி வளைத்து சோதனை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் தனியே நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்து 179 பயணிகளும் பாதுகாப்பாக வெளியாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.