×

நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை: நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:நாடாளுமன்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கின்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.பாரதிய ஜனதா கட்சி வெற்றிச் செய்திகள் மட்டுமே நாடெங்கும் அலை பாய்ந்து கொண்டு இருக்கின்ற வேளையில், வேறு சில செய்திகள் கவலையையும், அதிர்ச்சியையும் தருகின்றன.

மத்திய பிரதேசத்திலும், குஜராத்திலும், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடைபெற்று இருக்கிற இந்த வன்கொடுமைகள்,  நரேந்திர மோடியின் அடுத்த ஐந்து ஆண்டுகால ஆட்சியின் மீது அச்சத்தையும், அவநம்பிக்கையையும்  ஏற்படுத்துகின்றன.
சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனைப் பாதுகாத்து, மத நல்லிணக்கத்தை உருவாக்கி, நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சி சக்கரத்தைச் சுழற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர  மோடியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Modi ,nation ,country , peaceful, rotate , Prime Minister ,Modi , Vaiko
× RELATED கோவையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணி தொடங்கியது