×

காங்கிரஸ் கட்சி தோல்வி அடையவில்லை; காங்கிரஸ்காரர்கள் தான் தோல்வி அடைந்துள்ளனர் : கே.எஸ்.அழகிரி

சென்னை: பிரிவினையை விரும்பாத மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளதாக சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையவில்லை என்றும், காங்கிரஸ்காரர்கள் தான் தோல்வி அடைந்துள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தோல்வியை சரி செய்து மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.

இதில், பாஜ பெரும்பான்மை பெற்றது. ஓரிரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. பிற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதற்கு, ராகுல் தலைமை வகிக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரிவினையை விரும்பாத மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்டது சறுக்கல் தான் என்றும் வீழ்ச்சி அல்ல என்றும் தெரிவித்தார்.

Tags : Congressmen ,Congress Party ,KS Azhagiri , Congress, Lok Sabha election, Tamilnadu, KS Azhagiri
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...