×

வீட்டை உடைத்து நகை கொள்ளை

புழல்: செங்குன்றம், கிராண்ட் லைன் திருநீலகண்ட நகர் 4வது தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா (25). இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. நேற்று தனது குழந்தைகளுடன் ஆவடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்ற மஞ்சுளா, அங்கிருந்து  வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை, ₹95 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து  மஞ்சுளா செங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : House ,break , Break ,house, Jewel, robbery
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...